ETV Bharat / state

‘தமிழ்நாடு பட்ஜெட்டை இந்தியாவே பாராட்டுகிறது’ - உதயநிதி

author img

By

Published : Mar 20, 2022, 7:45 AM IST

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையை இந்தியாவே பாராட்டுகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை  உதயநிதி ஸ்டாலின்  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலை திறப்பு  திமுக மாநில இளைஞர் அணி செயலாளர்  Udayanithi stalin  tamil nadu budget  udhayanithi talks about budget  Bronze statue of Emperor Perumbidugu Mutharaiyar  Emperor Perumbidugu Mutharaiyar statue inauguration
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலையினை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

மதுரை: ஆனையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலையினை திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 19) திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க வேண்டும் என மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில், 8 1/4 அடி உயரத்துக்கு வெங்கலச் சிலை திறக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இதையடுத்து, விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மதுரை என்றாலே அன்பும் பாசமும் நிறைந்தது. தமிழ்நாட்டில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான். உள்ளாட்சி தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி.

மார்ச் 18 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை இந்தியாவின் ஒட்டுமொத்த தலைவர்களும் பாராட்டுகின்றனர். இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக, தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்.

உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்க்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் எந்தவித தவறும் செய்யாமல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: 2014இல் இந்தியாவுக்கு சுதந்திரம் என பாஜகவினர் மாற்றுவார்கள் - ப. சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.