ETV Bharat / state

நீட் தேர்வு முறைகேட்டை தமிழ்நாடு அரசுதான் கண்டுபிடித்தது - செல்லூர் ராஜூ

author img

By

Published : Sep 27, 2019, 7:55 PM IST

மதுரை: நீட் தேர்வு முறைகேட்டை தமிழ்நாடு அரசுதான் கண்டுபிடித்துள்ளது எனவும், அதை குறை கூறாமல் பாராட்ட வேண்டும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில் மதுரை மீனாட்சி கல்லூரி வளாகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நீட் தேர்வு முறைகேட்டை தமிழ்நாடு அரசுதான் கண்டுபிடித்துள்ளது. அதை குறை கூறாமல் பாராட்ட வேண்டும். அதேபோல் மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு நடக்கிறதா என தெரியவில்லை. வரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம் என்றார்.

சமுதாய வளைகாப்பு விழா

தொடர்ந்து பல்கலைகழகங்களில் பகவத் கீதை தத்துவியல் பாடமாக சேர்க்கப்பட உள்ளது குறித்த கேள்விக்கு, எதையுமே மேலோட்டமாக பார்த்து பதிலளிக்க முடியாது என்றார். மேலும், பேசிய அவர் இடைத்தேர்தல் குறித்து பொன். ராதாகிருஷ்ணன் அவரது நிலைப்பாட்டை கூறியிருக்கிறார். அனைத்துக் கட்சி தலைவர்களையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் அழைத்து பேசியுள்ளனர் என்றார்.

Intro:*நீட் தேர்வு முறைகேட்டை தமிழக அரசு தான் கண்டுபிடித்துள்ளது. அதை குறை கூறாமல் பாராட்ட வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி*
Body:*நீட் தேர்வு முறைகேட்டை தமிழக அரசு தான் கண்டுபிடித்துள்ளது. அதை குறை கூறாமல் பாராட்ட வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி*


சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில் மதுரையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

மதுரை மீனாட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 560 பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார்.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்தியாளர்கள் டம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,

*நீட் தேர்வு முறைகேட்டை தமிழக அரசு தான் கண்டுபிடித்துள்ளது. அதை குறை கூறாமல் பாராட்ட வேண்டும்*

மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு நடக்கிறதா எனத்தெரியவில்லை.

நீட் தேர்வு முறைகேடு இதுபோன்று நடக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் எண்ணம்.

யாருக்கு தகுதி உள்ளதோ அவர்கள் தான் வர வேண்டும்.

பல்கலை கழகங்களில் பகவத் கீதை தத்துவவியல் பாடமாக சேர்க்கப்பட உள்ளது என்ற கேள்விக்கு,
எதற்குமே மேலோட்டமாக பார்த்து பதில் சொல்ல முடியாது.

பொன்.இராதாகிருஷ்ணன் இடைத்தேர்தல் குறித்து அதிமுக பாஜகாவோடு கலந்தாலோசிக்கவில்லை என கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவருடைய நிலைப்பாட்டை அவர் சொல்லியிருக்கிறார். அனைத்து கூட்டணி கட்சித்தலைவர்களையும் முதல்வர், துணைமுதல்வர் அழைத்து பேசியுள்ளனர். ஒருங்கிணைப்புக்குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அவர்கள் பேசுவார்கள் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.