ETV Bharat / state

ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Nov 3, 2020, 2:31 PM IST

மதுரை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளில் சிகிச்சை எடுக்கத் தேவையில்லை; மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பகடியாக தெரிவித்துள்ளார்.

minister udhayakumar
minister udhayakumar

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட 24 விழுக்காடு கூடுதலாக கிடைத்துள்ளது. தற்போது வரை, வடகிழக்குப் பருவமழை 45 விழுக்காடு பற்றாக்குறை மழையாக கிடைத்துள்ளது. மழை நீர் தேங்கும் விவகாரத்தில் மக்கள் குழப்பப்பட்டு வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் மழையை வைத்து மழை நீர் தேக்கம் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9ஆயிரத்து 393 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த முகாமில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 400 பேர் தங்கலாம். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் அறிவிப்புகளின் படி பணிகள் நடைபெறுகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை தாமதமாக மாத இறுதியில் தொடங்கியுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை அறியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். கரோனா மற்றும் நிர்வாக காரணங்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தாமதமானது. அதிமுக அரசை குறை சொல்வது தான் ஸ்டாலினின் பணியாக உள்ளது. ஸ்டாலின் வெளிநாடுகளில் சிகிச்சை எடுக்கத்தேவையில்லை. மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.

தமிழ்நாடு அரசின் சாதனைகளை ஸ்டாலினால் மறைக்க முடியாது. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறார். ஸ்டாலினால் தமிழ்நாடு மக்களுக்கு எந்தவொரு நல்ல காரியமும் நடக்கவில்லை. இனியும் நடக்கப்போவதில்லை" என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கோயிலில் சிறப்பு வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.