ETV Bharat / state

‘திமுக அமைச்சர்களின் குடும்பங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளன’ - செல்லூர் ராஜு விமர்சனம்

author img

By

Published : Sep 11, 2022, 10:32 PM IST

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை ஸ்டாலின் குடும்பமும், அமைச்சர்களின் குடும்பங்கள் மட்டுமே மகிழ்ச்சியில் உள்ளன என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மு.க ஸ்டாலின், அமைச்சர்களின் குடும்பங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளன - செல்லூர் ராஜு
செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு

மதுரை: பைகாரா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செல்லூர் ராஜூவின் மகன் ஆர்.ஜெ தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்தினருடன் இணைந்து துவங்கி வைத்தார். இதில் கண், பல், பொது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தேவைப்படுவோருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ," செல்லூர் ராஜூ, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். வேறு தொழில் செய்யலாமா இல்லை தொழிலை விட்டுச் செல்லலாமா என்ற நிலைக்குச் சென்று உள்ளனர்.

மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம் ஏன் நடத்தினர். மக்கள் ஆதரிக்காத போதும் மின்கட்டண உயர்வு நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. பிறகு எதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தினீர்கள்? வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மீது மேலும் சுமையை இந்த அரசு ஏற்றி உள்ளது.

திராவிட மாடலா? மக்கள் மீது மாதந்தோறும் வரி சுமத்துவதுதான் திராவிட மாடலா திமுக பொறுப்பேற்றதிலிருந்து
தமிழ்நாட்டில் உள்ள எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டுமே மகிழ்ச்சியில் இருக்கின்றன என்றார்.

எடப்பாடி பழனிசாமி தற்காலிக பதவி குறித்த கேள்விக்கு, நான்கரை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர். முதலமைச்சரின் தந்தை முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், கட்சித் தலைவராக இருந்தவர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உழைப்பால் உயர்ந்தவர். படிப்படியாக தொடர்ந்து முதலமைச்சரானார், அப்பாவுக்கு பின் வந்தவர் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளராக உள்ளார். வருங்காலத்தில் பொதுச் செயலாளராக ஆக உள்ளார்.

பொய் வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாததால் தமிழ்நாடு மக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் மீது மட்டுமல்ல அவரின் குடும்பத்தின் மீதும் கோபத்தில் உள்ளனர். தமிழ்நாட்டின் 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அதிமுக. 100 ஆண்டுகள் கடந்தும் இயக்கம் இருக்க வேண்டுமென ஜெயலலிதா சூளுரைத்தார், அதை எடப்பாடி பழனிசாமி செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும் என்றார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்த கேள்விக்கு, ராகுல் காந்தி ஓர் இளம் தலைவர் அவரின் அரசியல் பயணத்தில் தேச ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக அமையுமா எனத் தெரியவில்லை ராகுல் காந்திக்கு நல்லபடியாக அமையும் என்றார். முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என கூறுகிறார். என்ற கேள்விக்கு, ஸ்டாலின் ஜோக் செய்கிறார் அதற்கு சிரிக்கத் தான் செய்ய வேண்டும்.

நிமிடத்திற்கு நிமிடம் போஸ் மற்றும், டிவி விளம்பரத்தில் தோன்றுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என நகைச்சுவை நடிகர் வடிவேலு இல்லாத குறையை தமிழ்நாடு அமைச்சர்களும், ஸ்டாலினும் போக்குகிறார்கள். ஒரு நல்ல திட்டத்தை நிறுத்திவிட்டு மாணவிகளுக்கு ஆயிரம் என கொடுக்கிறார்கள், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் திட்டத்தை அனைத்து குடும்ப அட்டைக்கும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி வழங்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முயற்சி செய்கிறார் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிதியை வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கி இருப்போம். கடந்த ஆண்டை விட நீட் தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு பின் தங்கி உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் தேர்ச்சி விகிதம் குறைந்தது. நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு வர முழு காரணம் திமுக தான் அரசு தான் என குற்றம்சாட்டியுள்ளார்.

திட்டத்தை நிறைவேற்ற கருவூலத்தில் பணமில்லை என ஸ்டாலின் கூறுகிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சருக்கு கஜானாவில் பணம் இருக்கிறதா இல்லையா என தெரியாமலா இருக்கும். மதுவிலக்கு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என உறுதி கொடுத்தார் ஆனால் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு

திமுகவின் வெற்றிக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மிக முக்கியக் காரணம் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார். முதலில் மக்களுக்கு அல்வா கொடுத்த மு.க.ஸ்டாலின் தற்போது அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார். பார்ப்போம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்களா என அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என கூறினார்.

இதையும் படிங்க:மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் ஊசியா...? அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.