ETV Bharat / state

எலி தயாரிப்பாளருக்கு பூனையாய் மாறிப்போன வடிவேலு!

author img

By

Published : Jan 8, 2020, 1:59 PM IST

மதுரை: நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு மீது காவல் நிலையத்தில் புகார்
நடிகர் வடிவேலு மீது காவல் நிலையத்தில் புகார்

மதுரை மாவட்டம் மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் 2015ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து ‘எலி’ என்ற படத்தை தயாரித்தார்.

இந்த படத்தின் மூலம் சதீஷ்குமாருக்கு ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வடிவேலுவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன், தயாரிப்பாளர் சதீஷ்குமாரின் அலுவலகத்திற்குச் சென்று அடிக்கடி ரகளையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

நடிகர் வடிவேலு உதவியாளர் மீது காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில் சதீஷ்குமார் சென்னைக்குச் சென்றுள்ள நேரம் பார்த்து, மணிகண்டன் உட்பட மூன்று பேர் கொண்ட கும்பல், அவரது வீட்டிற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், அங்கு வந்த மேலாளர் கோவிந்தராஜனையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, கோவிந்தராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின்படி, மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகர் வடிவேலுவின் பெயரை வழக்கில் சேர்க்கவில்லை.

இதுகுறித்து தீவிர விசாரணைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டம் குறித்து ராதா ரவி சர்ச்சை பேச்சு

Intro:நடிகர் வடிவேலு மீது காவல் நிலையத்தில் பரபரப்பான குற்றச்சாட்டு

நடிகர் வடிவேலு தன்னுடைய உதவியாளர் மூலம் பிரபல பட தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார். இது குறித்து 3 பேர் மீது வழக்கு பதிவு.
Body:நடிகர் வடிவேலு மீது காவல் நிலையத்தில் பரபரப்பான குற்றச்சாட்டு

நடிகர் வடிவேலு தன்னுடைய உதவியாளர் மூலம் பிரபல பட தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார். இது குறித்து 3 பேர் மீது வழக்கு பதிவு.

மதுரை மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ்குமார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து எலி என்ற படத்தை தயாரித்துள்ளார், இந்த படத்தின் மூலம் சுமார் 9 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து வடிவேலுவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் அவ்வப்போது நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் தயாரிப்பாளரின் அலுவலத்திற்கு வந்து ரகளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது, இந்த நிலையில் மூன்று மாவடி பகுதியில் உள்ள தயாரிப்பாளர் சதிஸ்குமார் வீட்டில், அவர் சென்னைக்கு சென்று இருந்த நேரத்தில் அவர் வீட்டிற்கு வந்த நடிகர் வடிவேலு உதவியாளர் மணிகண்டன் உட்பட 3 பேர் கொண்ட கும்பல் வீட்டை அடித்து நொறுக்கி வீட்டில் ரகளை செய்து அங்கு வந்த மேலாளர் கோவிந்த ராஜன் என்பவரை தாக்கி காயம் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கோவிந்தராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் புதூர் காவல்நிலையத்தில் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் உட்பட மூன்று பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது, கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பிரபல தயாரிப்பாளரை நடிகரின் உதவியாளர் வீட்டிற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படும் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.