ETV Bharat / state

திறந்த புத்தக நூலகம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அசத்தல்

author img

By

Published : Jul 16, 2022, 8:32 PM IST

Updated : Jul 16, 2022, 9:53 PM IST

அனைத்து பொதுமக்களும் பயன்படுத்த ஏதுவாக ‘அறிவு சுரபி’ என்ற பெயரில் திறந்த புத்தக நூலகம் ஒன்றை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

அனைவரும் பயன்படுத்த ஏதுவாக திறந்த புத்தக நூலகம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அசத்தல்
அனைவரும் பயன்படுத்த ஏதுவாக திறந்த புத்தக நூலகம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அசத்தல்

மதுரை: முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா காமராஜரின் 120ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் 'அறிவு சுரபி' என்ற திறந்த புத்தக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. வடபழஞ்சி ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் சேர்க்கை மையத்தில், 'அறிவு சுரபி' எனும் திறந்த புத்தக நூலகத்தை மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குமார் திறந்து வைத்தார்.

இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூரு இந்திய அறிவியல் கழக பேராசிரியர் கே.முனியப்பா, பேராசிரியர் எஸ்.சம்பத், முன்னாள் பேராசிரியர் த. தர்மலிங்கம் உயிரி தொழில்நுட்பவியல் துறை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் எம்.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைவரும் பயன்படுத்த ஏதுவாக திறந்த புத்தக நூலகம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அசத்தல்
திறந்த புத்தக நூலகம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அசத்தல்

இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் கூறுகையில், “அறிவு சுரபி என்ற திறந்த புத்தக நூலகத்தில் பொது வாசிப்புக்கான பல்வேறு வெளியீடுகள் மற்றும் போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவ - மாணவியர்களுக்குத் தேவையான புத்தகங்கள் உள்ளன. மேலும், நன்கொடையாக பெறப்பட்ட பல்வேறு தலைப்புகள் அடங்கிய புத்தகங்களும் இங்கு உள்ளன.

ரயில் மற்றும் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பல்கலைக்கழத்திற்கு பணி நிமித்தமாக வருகை புரியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ”அறிவு சுரபி" நூலகத்தில் தங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று, வீட்டில் இருந்தபடியே புத்தகங்களைப் படிக்க விரும்பினால் பெற்றுச்செல்லலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்த அறிவு சுரபி நூலகத்திற்கு சமூக நலனில் அக்கறை கொண்ட நபர்கள் தங்களின் புத்தகங்களை நன்கொடையாக வழங்க வேண்டும்” என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நூலகர் முனைவர் சுரேஷ் ஒருங்கிணைத்து இருந்தார்.

இதையும் படிங்க: அரசு விழாவில் மத சடங்குகளா? - விரட்டியடித்த தர்மபுரி எம்பி!

Last Updated : Jul 16, 2022, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.