ETV Bharat / state

நெல்லை கண்ணன் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Jan 20, 2020, 8:52 PM IST

மதுரை: பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நெல்லை கண்ணன் தொடர்ந்த வழக்கினை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை கண்ணன் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
நெல்லை கண்ணன் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

நெல்லை கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஓர் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த டிசம்பர் 29இல் SDPI கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய போது பிரதமர் மோடி குறித்தும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறி பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே "ஜோலியை முடிக்கலியா?" என பேசப்பட்டது. அதன் பொருள் வேலை. அதாவது அரசியலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொணரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல. ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது புகார் அளித்தவர் சார்பில் முறையிடப்பட்டு, அதற்காக வக்காலத்து தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Intro:பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லைக் கண்ணன் தொடர்ந்த வழக்கினை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லைக் கண்ணன் தொடர்ந்த வழக்கினை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நெல்லைக் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த டிசம்பர் 29ல் SDPI கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய போது பிரதமர் மோடி குறித்தும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்தும் அவதூறாக பேசியதாகக்கூறிபல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே "ஜோலியை முடிக்கலியா?" என பேசப்பட்டது. அதன் பொருள் வேலை. அதாவது அரசியலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொணரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல. ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லைக் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து, நெல்லைக் கண்ணன் மீது புகார் அளித்தவர் சார்பில் முறையிடப்பட்டு, அதற்காக வக்காலத்து தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.