ETV Bharat / state

தாமிரபரணியா? பொருநையா?: பெயர் மாற்ற விவகாரம் - மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Dec 2, 2022, 5:10 PM IST

தாமிரபரணி ஆற்றை பொருநை நதி என்று பெயர் மாற்ற உத்தரவிடக்கோரிய வழக்கிற்கு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Thamirabarani river to Porunai river  Thamirabarani river  Madurai High Court  Madurai High Court ordered TN government  TN government  Porunai river  Thamirabarani river name change case  Madurai  High Court  பொருநை நதி  தமிழக அரசு  தாமிரபரணி ஆறு  உயர்நீதிமன்றம்  உயர்நீதிமன்ற மதுரை கிளை  தாமிரபரணி
தாமிரபரணி ஆறு

மதுரை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகத் திகழும் தாமிரபரணி ஆற்றினை பெயர் மாற்றக் கோரி, தூத்துகுடியைச் சேர்ந்த பொன்காந்திமதி நாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'அதில் பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது, தாமிரபரணி ஆறு. தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக 'பொருநை நதி' எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டுள்ளது.

திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.

தாமிரபரணி என்பது வடமொழிச்சொல் அதற்கு மாற்றாக தூய தமிழ்ப்பெயரான பொருநை நதி என மாற்றம் செய்யக்கோரி தமிழ்நாட்டின் தலைமைச்செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, தாமிரபரணியின் பெயரையும் பொருநை நதி எனப்பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோரிக்கை முக்கியமானது என குறிப்பிட்ட நீதிபதிகள், தாமிரபரணி என்பதை பொருநை நதி என மாற்றுவது குறித்து அரசு உரிய பரிசீலனை செய்து 12 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சட்ட விரோதமாக நம்பர் பிளேட் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.