ETV Bharat / state

பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

author img

By

Published : Feb 27, 2019, 12:00 PM IST

மதுரை: சோளங்குருணி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் எதிரே வந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Madurai

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியர்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர் (30). லோடு-மேன் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி சங்கரேஸ்வரி(30), மகள் சுந்திரி(6), மகன் முருகசெல்வம்(2).

இந்நிலையில், திருப்புவனம் அருகே புல்வாய்க்கரை கிராமத்தில் உள்ள தர்மரின் மாமனார் வீட்டிற்குச் செல்வதற்காக, இருசக்கர வாகனத்தில் தனது குடும்பத்துடன் சென்றார்.

வளையங்குளம் வழியாக சோளங்குருணி சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, சார் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்லன் என்பவரின் மகன் ராமன்(30) இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளார்.

அப்போது, ராமன் தனது இருசக்கர வாகனத்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி முந்திச் செல்ல முயன்றபோது, எதிரில் வந்த தர்மர் வாகனத்தில் மோதினார்.

இதில், நிலைதடுமாறி கீழே விழந்ததில் தர்மர், சுந்தரி, முருகசெல்வம் ஆகிய மூன்று பேரும் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சங்கரேஸ்வரியை இருசக்கர வாகனத்தில் வந்த ராமர் அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் உட்பட மூன்று பேர் பலியானது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
26.02.2019

*அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி அப்பா,மகன்,மகள் உடல் நசுங்கி சாம்பவ இடத்திலேயே மரணம்*



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வளையன்குளத்தில் அரசு பேருந்து மீது 2 டுவீலர் நேருக்கு நேர்  மோதி  சக்கரத்தில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி.


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே கூத்தியர்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் (30), இவர் லோடு மேன் வேலை செய்து வருகிறார்.

இவரது மாமனார் வீடு திருப்புவனம் அருகே புல்வாய்கரை கிராமத்தில் உள்ளது.

இங்கு செல்வதற்காக தனது டூவீலரில் தனது மகள் சுந்தரி (6),
மகன் முருகசெல்வம் (2), மற்றும் மனைவி சங்கரேஸ்வரி ஆகியோருடன் வளையங்குளம் வழியாக சோளங்குருணி ரோட்டில் செல்லும் போது சார்புதுக்கோட்டையை சேர்ந்த செல்லன் மகன் ராமன் (30) டூவீலரில் (எதிரே வந்தவர்) முன்னால் சென்ற அரசு பேரூந்தை முந்தி செல்லும் போது எதிரேபுறமாக வந்த தர்மர் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் தர்மர் நிலை தடுமாறி கீழே விழந்ததில் அரசு பேருந்து தர்மர் மற்றும் மகள் சுந்தரி. மகன் முருகசெல்வம் 3 பேரும் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதில் சங்கரேஸ்வரி மற்றும் மற்றொரு டூவீலரில் வந்த ராமர் பலத்த காயமடைந்து 108 மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு  வந்த பெருங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள், மகன்  உட்பட 3 நபர்கள் பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.



Visual send in ftp
Visual name : TN_MDU_1_27_3 KILLED IN ACCIDENT_TN 10003
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.