ETV Bharat / state

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பெண் காவலருக்கு கரோனா!

author img

By

Published : Jun 19, 2020, 3:28 PM IST

மதுரை: வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் பணியாற்றிவரும் பெண் காவலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் அவர் பணியாற்றிய அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மதுரை வெடிகுண்டு தடுப்புபிரிவு காவலருக்கு கரோனா madurai madurai police corona madurai bomb squade
வெடிகுண்டு தடுப்புபிரிவு காவலருக்கு கரோனா

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில, மதுரை தெற்கு வெளி வீதியில் இயங்கிவரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த அலுவலகம் மூடப்பட்டு தற்போது கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுவருகிறது. அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 20க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், காவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், மதுரையில் பணியாற்றிவரும் அனைத்து காவலர்களுக்கும் கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை அனைவரும் முறையாக பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சளி இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் உடனடியாக அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சுடு தண்ணீர் கூட கொடுப்பதில்லை; கரோனா பாதித்தவர்கள் சரமாரி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.