ETV Bharat / state

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக வீடுகள்!

author img

By

Published : Aug 2, 2019, 10:08 AM IST

மதுரை: கஜா புயலில் வீடுகளை இழந்தோருக்கு நிரந்த வீடுகளை கட்டித்தருவதற்குள்ளாக தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் அமைத்துத்தர உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜாபுயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு போர்கால அடிப்படையில் தற்காலிக வீடு!

தஞ்சை மாவட்டம் கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம், உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 நவம்பர் 15ஆம் தேதியன்று இரவு ஏற்பட்ட கஜா புயலில் தங்கள் வீடு முற்றிலும் சேதமடைந்தது. இதற்காக இழப்பீடு வழங்கக்கோரி, வருவாய்த் துறையினரிடம் உரிய ஆவணங்களை கொடுத்தும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. அதனால் இழப்பீடு விரைவில் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு ஏன் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை? என்று கேள்வியெழுப்பினர். மேலும், கஜா புயலால் முற்றிலும் சேதமடைந்த வீடுகள் அனைத்துக்கும் உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுவருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் முழுமையாக அனைவருக்கும் வீடுகள் கட்டிமுடிக்கப்படும்' என மாநில அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, "ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக வேறு புயல் வந்தாலோ, பருவமழை தீவிரமானாலோ வீடுகளை இழந்தவர்கள் பாதிக்கப்படுவர். ஆகையால் அரசு வீடுகளை கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குள் தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். இந்த வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க விரும்புகிறது.

ஆகவே, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அப்போது அரசின் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:கஜா புயலில் வீடுகளை இழந்தோருக்கு நிரந்த வீடுகளை கட்டித்தருவதற்குள்ளாக தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் அமைத்துத்தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
Body:கஜா புயலில் வீடுகளை இழந்தோருக்கு நிரந்த வீடுகளை கட்டித்தருவதற்குள்ளாக தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் அமைத்துத்தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

*கஜா புயலில் வீடுகள் சேதமான 5 லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது - அரசுத்தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்.*

தஞ்சை மாவட்டம் கரம்பயம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் கிராமம் கத்தரிக்கொல்லை தெருவில் எங்களுக்கு சொந்தமாக ஒரு ஓட்டு வீடு உள்ளது. அங்கு தான் நாங்கள் வசித்து வந்தோம்.

கடந்த 15.11.2018 அன்று இரவு ஏற்பட்ட கஜா புயலில் எங்கள் வீடு முற்றிலும் சேதமடைந்தது. வருவாய்துறையினரிடம் உரிய ஆவணங்களை கொடுத்து இழப்பீடு கோரினோம்.

ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே முற்றிலும் சேதமடைந்த எங்கள் ஓட்டு வீட்டுக்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும்"
என கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, முற்றிலும் சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு ஏன் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை? கஜா புயலால் முற்றிலும் சேதமடைந்த வீடுகள் அனைத்துக்கும் உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில், “கஜா புயலால் முற்றிலும் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.

கஜா புயலில், ஊரக பகுதிகளில் 2,53,645 குடிசை வீடுகளும்,
நகர் பகுதியில் 29,004 குடிசை வீடுகளும் சேதமடைந்துள்ளன. அதேபோல, 30,044 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகள் கட்டித்தருவது தொடர்பாக மத்திய அரசின் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மத்திய அரசின் உதவி கோரப்பட்டுள்ளது.

5,75,000 குடும்பங்களுக்கு
நிலமும் பட்டாவும் வழங்கப்பட்டு, 5 ஆண்டுகளுக்காக வீடுகள் கட்டிமுடிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை இந்த திட்டத்தின் மூலம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுத்து, வீடு கட்டித்தர 5 ஆண்டுகள் ஆகும் என குறிப்பிட்டுள்ளது.

அந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக வேறு புயல் வந்தாலோ, பருவமழை தீவிரமானாலோ வீடுகளை இழந்தவர்கள் பாதிக்கப்படுவர்.

ஆகையால் அரசு வீடுகளை கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குள் தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.

அதோடு, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை மிகவும் முக்கியமானதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.

ஆகையால், இந்த வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க விரும்புகிறது.

ஆகவே, 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

அப்போது அரசின் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.