ETV Bharat / state

'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்!'

author img

By

Published : Nov 16, 2019, 7:25 PM IST

மதுரை: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்தால்,  உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

dravida-kazhagam-leader-veeramani-comments-about-sabarimala-issue

விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்குத் தடையேதுமில்லை. அந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடையில்லாததால், பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பாகும்.

தொடர்ந்து, சென்னை ஐஐடியில் பெரிய அளவிற்கு இதுவரை பலர் தற்கொலை செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவ்வித உற்சாகமுமின்றி வெளியேறக்கூடிய சூழலை ஐஐடி உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர் சந்திப்பு

ஐஐடி போன்ற இடங்களில் உயர் சமுதாய பேராசியர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் அதிமாக இருப்பது, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முன்னேறிவிடக் கூடாது, இடஒதுக்கீட்டின் மீது உள்ள வெறுப்பு, ஜாதி மத உணர்வு உள்ளிட்ட அடிப்படையே தற்கொலை போன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளன.

மாணவி பாத்திமா லத்தீப் உயிரிழந்தது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், பெரியார் மண்ணில் இவ்வாறு நடத்திருப்பது வேதனைக்குரியது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'சபரிமலையில் பீடி, சிகரெட் குடித்த பெண்களை அனுமதித்தவர் பினராயி விஜயன்' - அர்ஜூன் சம்பத் சர்ச்சைப் பேச்சு

Intro:திராவிடர் கழகம் சார்பில் விருதுநகரில் நடைபெறும்
" பகுத்தறிவாளர் கழக " பொன் விழா மாநாட்டில் கலந்துகொள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்புBody:
திராவிடர் கழகம் சார்பில் விருதுநகரில் நடைபெறும்
" பகுத்தறிவாளர் கழக " பொன் விழா மாநாட்டில் கலந்துகொள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு
சென்னை ஐஐடியை பொருத்த வரை இதுவரை பல பேர் பெரிய அளவில் தற்கொலை செய்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மிகவும் உற்சாகம் இல்லாமல் வெளியேறக்கூடிய சூழ்நிலை உருவாக்கிய காரணத்தினால் இதற்கு முன் இந்த கதவுகள் திறக்கப்பட வில்லை.

அரசியல் காரணத்தினால் திறந்த கதவுகளை அங்கு பணிபுரியும் போராசிரியர்கள், பார்ப்பனர்கள் அதிகம் உள்ள காரணத்தினால் வெளியேற கூடிய சூழல் உள்ளது.

இட ஒதுக்கீடு மீது உள்ள எதிர்ப்பு காரணத்தினால் மற்ற சாதி, மத உணர்வுகளும் தான் இதற்கு அடிப்படை உணர்வு இருக்கிறது


இதற்காக (மாணவி லத்திகா ) நடைபெறும் விசாரணை விறுப்பு வெறுப்பில்லாமல் நடைபெற வேண்டும்,


இனிமேலும் இப்படி பட்ட கொலைகள் நடைபெறக் கூடாது.

இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

தமிழ்நாடு பாதுகாப்பான இடம் என்பதால் அனுப்பினோம்
ஆனால் இங்கேயே பாது காப்பு இல்லையே என பெற்றோர்கள் கூறினார்கள்


அமைதி பூங்கா வான தமிழ்நாட்டில் குறிப்பாக பெரியார் மண்ணில் இப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பது வேதனைக்குரிய விசயம், வெட்கத்திற்குரியது. வெட்கத்திற்குரியது.
அது போல் சபரிமலை விசயத்தில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு தடையேதும் இல்லை"

இந்த வழக்கை 7 பேர் கொண்ட விசாலமான அமர்விற்கு மாற்றி விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது.
பதிவு செய்த அத்தனை பேரையும் அனுமதித்தால் தான் சட்டப்படி உரிமை ஆகும்.இதனை மறுத்தால் உச்சநீதிமன்றத்தை அவமதித்ததாகும் என வீரமணி கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.