ETV Bharat / state

OBC பிரிவின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தலாம் - நீதிமன்றம் கருத்து

author img

By

Published : Nov 8, 2022, 10:49 PM IST

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது OBC பிரிவின் அடிப்படையிலான கணக்கெடுப்பை மக்களின் நலனுக்காக கொள்கை ரீதியான முடிவில் மாற்றம் கொண்டு வந்து செய்துகொள்ளலாம் என உயர் நீதிமன்றக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

OBC பிரிவின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க நீதிமன்றம் கருத்து
OBC பிரிவின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க நீதிமன்றம் கருத்து

மதுரை: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது SC/ST பிரிவு போல OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக்கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வந்தது.

மதுரை மேலக்காலை சேர்ந்த தவமணி தேவி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "2001ஆம் ஆண்டிலேயே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சமூக நீதி அமைச்சகமும், OBC அடிப்படையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்தது.

ஆனால், அதுபோல கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. OBC அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படும் போதே, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க ஏதுவாக இருக்கும்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது SC/ST பிரிவு போல, OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, அகில இந்திய OBC ஒருங்கிணைப்புக்குழு மனு அளித்த நிலையில் எவ்வித பதிலும் தற்போது வரை அளிக்கப்படவில்லை.

தற்போது, கரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது SC/ST பிரிவு போல OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்துவது குறித்த அகில இந்திய OBC ஒருங்கிணைப்புக் குழுவின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் " எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசுத்தரப்பில், இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், ’மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என எவ்வாறு கூறுகிறீர்கள்.

1951-ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை முடிவு மக்களின் நலனுக்காக கொள்கை ரீதியான முடிவு மாற்றி அமைக்க பரிசீலனை செய்யலாமே’ என கருத்து தெரிவித்து. வழக்கு குறித்து மத்திய அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: வேலுமணி தாக்கல் செய்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.