ETV Bharat / state

மதுரையில் 587 கிலோ புகையிலை பொருள்களுடன் ஒருவர் கைது!

author img

By

Published : Sep 16, 2020, 2:18 PM IST

மதுரை: தெற்குவாசல் பகுதியில் 587 கிலோ புகையிலை பொருள்கள் வைத்திருந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

mdu
mdumdu

மதுரை தெற்குவாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் அனுராதா தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, சுமார் 587 கிலோ புகையிலை பொருள்களை நவபத்கானா தெருவைச் சேர்ந்த மலையரசு (வயது 39) என்பவர் புதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மலையரசுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.