கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி வனப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் கூட்டம் இருக்கின்றன.
இதனிடையே, அஞ்செட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் சார்பில் ஆங்காங்கே வெட்டப்பட்டுள்ள தொட்டிகளில் நீர் நிரப்பட்டுவருகிறது,
அந்தவகையில் அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டிய கேரட்டி என்னுமிடத்தில் உள்ள குட்டையில் நீரை தேக்கி வைக்கும் விதமாக வனத்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு குட்டையை ஆழப்படுத்தி தூர்வாரியிருந்தனர்.
அதில் சேமிக்கப்பட்டிருந்த நீரில் இன்று யானைக்கூட்டம் ஆனந்தமாக நீராடி, தாகம் தணித்து சென்றன.
இதையும் படிங்க:
காட்டுயானைகள் நிலங்களுக்குள் புகுவதைக் கண்டறிய விசாயிகளின் புது முயற்சி!