ETV Bharat / state

ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கடத்தியது யார்?

author img

By

Published : Aug 8, 2021, 1:25 PM IST

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் செல்போன்களை கொண்டு சென்ற லாரியிலிருந்து அடையாளம் தெரியாத கும்பல் ரூ.6 கோடி மதிப்பிலான செல்போன்களை கடத்தியுள்ளனர்.

ஆறு கோடி மதிப்புள்ள செல்போன்கள் கடத்தல்
ஆறு கோடி மதிப்புள்ள செல்போன்கள் கடத்தல்

கிருஷ்ணகிரி: காஞ்சிபுரத்தில் உள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் கோலார் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓசூர் அடுத்த பாகலூரை கடந்து கர்நாடக மாநில எல்லைப்பகுதியான முல்பாகல் பக்கமாக தேவராய சமுத்ரா என்ற பகுதி அருகே லாரி சென்று கொண்டிருந்தது.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அடையாளம் தெரியாத கும்பல் லாரியை வழிமறித்தது. லாரி ஒட்டுனரையும், அவரது உதவியாளரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு லாரியில் இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான செல்போன்களை கடத்தி சென்றது. காயத்துடன் லாரி ஓட்டுனர், உதவியாளர் இருந்ததை பார்த்த பொதுமக்கள், கோலார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு சென்று காவல்துறையினர், லாரி கடத்தப்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள், அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்வேறு கோணங்களில் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றி சென்ற லாரி டிரைவரை வட மாநில கும்பல் தாக்கி செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். சுமார் ஒரு மாதம் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் முகாமிட்டு ஓசூர் காவல்துறையினர் கொள்ளையர்கள் 10 பேரை கைது செய்தனர்.

அதே கும்பல் ஆந்திர மாநிலத்திலும் நகரி உள்பட பல்வேறு இடங்களிலும் பல கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். தற்போதும் இதே போல கொள்ளை நடந்துள்ளதால், இந்த செல்போன் கொள்ளையிலும் வட மாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கர்நாடக மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.