கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு ஆய தீர்வை துறு சார்பில் கள்ளச் சாராயம், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் தெய்வநாயகி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் ப.முரளி, செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து பேசிய கிருஷ்ணகிரி கோட்டாட்சியர்; கள்ளச் சாராயம், போதை பொருட்கள் பயன்படுத்துவோர் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
எனவே கள்ளசாராயம், போதை பொருட்களிலிருந்து விடுப்பட்டு உடலையும் மனதையும் காக்க வேண்டும். அவர்களின் குடும்ப வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'போதை அது சாவின் பாதை' - விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி