ETV Bharat / state

’சாராயம் கடத்தியதிலிருந்து தப்பிக்க செந்தில்பாலாஜி யார் காலில் விழுந்தார் என ஊருக்கே தெரியும்’

author img

By

Published : Sep 24, 2019, 6:30 PM IST

கரூர்: சாராயம் கடத்தியதிலிருந்து தப்பிக்க செந்தில்பாலாஜி யார் காலில் விழுந்தார் என ஊருக்கே தெரியும் என அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் காட்டமாக பேசியுள்ளார்.

அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர்

கரூர் மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பெரிய குளத்துப்பாளையம் குகை வழிப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர், குகை வழிப்பாதையை திறந்து வைத்தார்.

அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் ஆவேசமாக பேசியபோது

பின்னர் அவர் பேசியதாவது, அரசியலில் 16 கட்சிகளுக்கு சென்று வந்தவர் எல்லாம், இந்த குகை வழிப்பாதை திட்டத்தை நான்தான் செய்தேன் என்று சொல்லக்கூடாது. வெட்கம், மானம் இருந்தால் இனி அவர் சொல்லக்கூடாது. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொடுத்தது அதிமுக கட்சியும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். செந்தில்பாலாஜி வேண்டுமானால் இந்த திட்டங்களை நான் செய்தேன் என்று தன்னுடைய கழுத்தில் எழுதி தொங்கவிட்டு செல்லலாம். இதே குளத்துப்பாளையத்தை சேர்ந்த பிரமுகரிடம் இருந்து நிலத்தை அபகரித்த செந்தில்பாலாஜி மீது வழக்கு நடைபெற்று வருகிறது. 24 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தி, அதில் இருந்து தப்பிப்பதற்காக அவர் யார் காலில் விழுந்தார் என்று ஊருக்கே தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் கம்பி எடுத்து அடித்தார்கள் என்று கூறி வரும் செந்தில் பாலாஜி, அதிமுக பிரமுகர் ஒருவரை கற்களால் தாக்கினார். அதனைப் பார்த்து நாங்கள் வேடிக்கை பார்ப்பதா..? ஆதலால் நாங்கள் திருப்பி அடித்தோம். ஆங்காங்கே நிகழ்ச்சிகளில் மொய் வைப்போம் என்று செந்தில்பாலாஜி கூறுகின்றார். அவருக்கு வைத்த மொய்யை திரும்ப அவர் வைக்க மாட்டார். ஆனால் நாங்கள் மொய் வைத்தால் அதிகமாக வைப்போம், என்று காட்டமாக பேசினார்.

Intro:16 கட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜி நான் செய்த திட்டங்களை அவர் செய்த திட்டங்கள் என்று கூறுவதா- அமைச்சர் ஆவேசம்


Body:கரூரில் 50 ஆண்டு கால கோரிக்கையான பெரிய குளத்துப்பாளையம் வழி பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றி குகை வழிப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் கூறியதாவது:-
குளத்துப்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுடைய கோரிக்கையான குகை வழி பாதை திறக்கப்பட்டது. இந்த பாலமானது இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்துறை அமைச்சர் 670 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டது.
இந்த குகை வழி பாலத்தில் பயன்பாடு என்பது காமராஜர் பழம் வெங்கமேடு குளத்துப்பாளையம் போன்ற பகுதியில் இருக்ககூடிய மக்களுக்கும் டெக்ஸ்டைல்ஸ் தொழிலுக்கும் ஏதுவாக இருக்கும் என்பதும் கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிச் செல்லும் சூழல் இருந்தது இந்த குகை வழிப்பாதை வழிவகை செய்துள்ளது.


தொடர்ந்து பேசிய அமைச்சர் 16 கட்சிக்கு சென்று வந்தவர் நான் செய்தே நான் செய்தேன் என்று சொல்லக்கூடாது வெட்கம், மானம் இருந்தால் இனி சொல்லக்கூடாது திட்டங்களை கொடுத்தவர் அதிமுக கட்சியும் , முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், இனிமேல் வேண்டுமானால் கழுத்தில் எழுதி தொங்க விட்டு செல்லுங்கள் நான் திட்டங்களை செய்தேன் என்று மேலும் செந்தில்பாலாஜி கொண்டுவந்த அரசு மருத்துவக்கல்லூரி வாங்கல் பகுதியில் ஆனால் நான் கொண்டுவந்த மருத்துவக் கல்லூரி திட்டம் என்பது காந்திகிராமம் பகுதியில்.

தற்பொழுது இதே குளத்துபாளையம் பிரமுகரிடம் இருந்து நிலத்தை அபகரித்த வழக்கு நடைபெற்று வருவதையும் 24 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தியது யார் என்றும் அதற்காக யார் காலில் விழுந்தது வழக்கிலிருந்து தப்பித்தாய் என்று ஊருக்கே தெரியும். கள்ளச்சாராயம் காய்ச்சியவர் யார் என்று பொதுமக்களுக்கு தெரியாதா!.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் கம்பி எடுத்து அடித்தார்கள் என்று கூறி வரும் செந்தில் பாலாஜி திமுக பிரமுகர் ஒருவரிடம் கற்களால் தாக்கினார் அதனைப் பார்த்து நாங்கள் வேடிக்கை பார்ப்பதா ஆதலால் நாங்கள் திருப்பி அடித்தோம் மேலும் ஆங்காங்கே மொய் வைப்போம் என்று செந்தில்பாலாஜி கூறுகின்றார் நீங்கள் வைத்த மொய் வைக்க மாட்டீர்கள். ஆனால் நாங்கள் முன்வைத்தால் அதிகமாக வைப்போம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.