ETV Bharat / state

மகளைப் பார்க்கச் சென்ற தம்பதிக்கு நேர்ந்த கதி: கரூரில் சோகம்

author img

By

Published : Jan 9, 2021, 7:38 PM IST

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

couple died of road accident in karur
மகளை பார்க்கச் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்குள்பட்ட கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (65), இவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா ஆவாரங்காட்டு புதூரில் வசித்துவரும் மகள் வசந்தி வீட்டிற்குச் இருசக்கர வாகனத்தில் கொத்தமங்கலத்திலிருந்து சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

ஆவாரங்காடு புதூர் பகுதியில் வலப்பக்கம் திரும்பிய இருசக்கர வாகனத்தின் மீது சுதர்சன் என்பவர் ஓட்டிவந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைகுலைந்து சாலையில் விழுந்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து அறிந்த வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க... காங்கேயத்தில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.