ETV Bharat / state

வளையல் வண்டி விபத்து... தாய், தந்தையைப் பறிகொடுத்து நடுரோட்டில் தவித்த குழந்தைகள்...

author img

By

Published : Mar 11, 2022, 8:58 AM IST

கரூர் மாவட்டத்தில் வளையல் வண்டி மீது விபத்து மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் கண்முன்னே தாய்-தந்தை உயிரிழந்தனர்.

couple-died-in-road-accident-near-karur
couple-died-in-road-accident-near-karur

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த யேசுதாஸ்(35)-சிந்தாமணி(29) தம்பதி வளையல் வண்டியில் பேன்சி பொருள்கள் வியாபாரம் செய்துவந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் வீரப்பூர் கோயில் திருவிழாவில் மூன்று நாள்களாக வியாபாரம் செய்துவிட்டு, நேற்று(மார்ச்.10) குடும்பத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வண்டி கரூர் மாவட்டம் பாலவிடுதி சேவாப்பூர் வளைவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மூன்று குழந்தைகளின் கண்முன்னே தாய், தந்தை இருவரும் உயிரிழந்தனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவலர்கள் இருவரது உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: நேபாளம் பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.