கரூர் மாவட்டத்தில் கட்டளை உயர்மட்ட வாய்க்கால் அமைப்பதற்காக காவிரி வடிநிலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டத்திற்காக 33 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 185 ஏக்கரும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மூன்றாயிரத்து 589 ஏக்கரும் பரப்பளவுகொண்ட வேளாண் நிலம் பாசனம் பெறுகிறது.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முதலமைச்சருடன் இருந்தார்.
இந்நிகழ்ச்சி நேரலை நிகழ்வாக கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காவல் துறைக்கு 2,271 புதிய வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்