ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் உறவினர் வீடுகளில் ரெய்டு

author img

By

Published : Dec 15, 2021, 9:08 AM IST

Updated : Dec 15, 2021, 9:18 AM IST

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெய்டு
ரெய்டு

கரூர்: அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (டிசம்பர் 15) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, வேலூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

அதன்படி கரூர் அருகேயுள்ள வேலாயுதம்பாளையம் கூலகவுண்டனூர் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினரான வசந்தி சுப்ரமணி வீட்டிலும், கரூர் கோவை சாலையில் உள்ள ஜெயஸ்ரீ செராமிக் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிரடி ரெய்டு

Last Updated : Dec 15, 2021, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.