ETV Bharat / state

கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

author img

By

Published : Aug 11, 2020, 4:50 PM IST

கன்னியாகுமரி : மாவட்டம் முழுவதிலுமுள்ள அரசு மருத்துவமனை, கோவிட்-19 பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றில் அனுமிதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி
கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆயுர்வேத கல்லூரி மருத்துவமனை, நான்கு தனியார் மருத்துமனைகள் ஆகிய இடங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர மூன்று கோவிட் பராமரிப்பு மையங்களிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கச் செய்யும் வகையில், மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான பயிற்சிகள் மூலம் மனதளவில் சோர்வடைந்த நோயாளிகளை உற்சாகமடையச் செய்ய முடியும் என்றும் மருத்துவ ஊழியர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது' - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.