கன்னியாகுமரியில் மக்களவை இடைத்தேர்தல், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பல இடங்களில் மக்களை ஆர்வத்துடன் வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த வாக்குப்பதிவில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு விழுந்ததாகத் தகவல் பரவியது. அதிலும் மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும், இந்த முறைகேடு நடைபெற்று வருவதை வாக்காளர்கள் கண்டுபிடித்து, எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களைக் கொண்டு வந்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பதிவான வாக்குகளின் நிலை என்ன ? என்றும் வாக்காளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: நாகர்கோவில் வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை