ETV Bharat / state

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை குறைத்து பேசி பாருங்கள் - இந்து மகாசபா

author img

By

Published : Nov 23, 2019, 2:30 AM IST

கன்னியாகுமரி: இந்து மதத்தை குறைத்து பேசும் திருமாவளவனால், கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ குறைத்து பேச முடியுமா என அகில பாரத இந்து மகாசபாவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

kumari

இந்து தெய்வங்களையும் இந்துக்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் வி.சி.க தலைவர் திருமாவளவனை கண்டித்தும், அவரை கைது செய்யக் கோரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அகில பாரத இந்து மகாசபாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகில பாரத இந்து மகாசபாவினர் கலந்துகொண்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது

இதுகுறித்து அகில பாரத இந்து மகாசபா மாநில இளைஞர் அணி செயலாளர் துரைராஜ் கூறுகையில், "இந்து தெய்வங்களையும் இந்துக்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி திருமாவளவன் பேசிவருகிறார். இப்படி எந்த தலைவர்களும் பேசியதில்லை.

அகில பாரத இந்து மகாசபா மாநில இளைஞர் அணி செயலாளர் துரைராஜ்

இந்துக்களை குறைத்து பேசும் அவர், கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ குறைத்து பேசினால் பல்லக்கில் வைத்து சுமக்கிறோம். அவர் அப்படி பேசியதை வன்மையாக கண்டிக்கின்றோம். காவல்துறையை நாங்கள் நம்புகின்றோம் அவர்கள் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: திமுக - விசிக கூட்டணியில் உரசல்? - காரணம் இதுதான்!

Intro:இந்து தெய்வங்களையும், இந்துக்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தியும் கொச்சை படுத்தியும் பேசிவரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்தும் அவரை கைது செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அகில பாரத இந்து மகாசபாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.Body:tn_knk_04_hindumagasaba_protest_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

இந்து தெய்வங்களையும், இந்துக்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தியும் கொச்சை படுத்தியும் பேசிவரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்தும் அவரை கைது செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அகில பாரத இந்து மகாசபாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அகில பாரத இந்து மகாசபாவினர் இன்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் இந்து தெய்வங்களையும், இந்துக்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தியும் கொச்சை படுத்தியும் பேசிவரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்தும் அவரை கைது செய்யக் கோரி கோசங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர். யார் தூண்டுதலின் பெயரில் திருமாவளவன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என கேள்வி எழுப்பிய அகில பாரத இந்து மகாசபாவினர், எந்த மதத்தையும் புண் படுத்தாமல் இந்து மதத்தை மட்டுமே புண் படுத்தி வருவதற்கு போராட்டத்தின் மூலம் கண்டனம் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.