ETV Bharat / state

புரெவி புயல்: முன்னெச்சரிக்கை நடச்வடிக்கைகள் குறித்து அறிய அமைச்சர் குமரி பயணம்!

author img

By

Published : Dec 2, 2020, 10:41 PM IST

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்கவுள்ளார்.

minister udhayakumar travelling to kanyakumari
minister udhayakumar travelling to kanyakumari

கன்னியாகுமரி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கண்டறிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நாளை வருகை தரவுள்ளார்.

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாளை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் ஜோதி நிர்மலா, மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட எஸ்.பத்ரி நாராயணன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இச்சூழலில், அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தை இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.