ETV Bharat / state

புரெவி புயல்: கன்னியாகுமரிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு!

author img

By

Published : Dec 1, 2020, 3:05 PM IST

கன்னியாகுமரி: 'புரெவி' புயல் எதிரொலி காரணமாக 20 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர்.

national
national

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'புரெவி' புயல் காரணமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து புரெவி புயல் மீட்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையை சேர்ந்த 20 பேரை கொண்ட 2 குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர்.

இவர்கள் நவீன மீட்புப் படகுகள், உபகரணங்களுடன் தயார் நிலையில் தனியார் கல்லூரியில் தங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு 19 குழுவினரும் கேரளாவிற்கு 2 குழுவினரும் உள்ள நிலையில், தேவைக்கு ஏற்ப கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கூடுதல் குழுவினர்கள் வருவார்கள் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.