ETV Bharat / state

தோவாளை மலர் சந்தையில் பூ விலை கடும் உயர்வு

author img

By

Published : Oct 26, 2019, 1:14 PM IST

கன்னியாகுமரி: தீபாவளி பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பிச்சி பூ, மல்லி உள்ளிட்ட பூ விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

thovalai-flower

தமிழ்நாட்டிலுள்ள மலர் சந்தைகளில் மிகவும் புகழ் பெற்றது குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையாகும். இங்கு ராயக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் உள்ளூர், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் தினந்தோறும் பல டன் பூ இறக்குமதியாகும்.

இந்தச் சந்தைக்கு வரும் பூ கேரளா மாநிலம், சிங்கபூர், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் தோவாளை மலர் சந்தையில் பூ விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கிலோ ஒன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ மூன்று மடங்கு விலை உயர்ந்து இன்று ஆயிரம் ரூபாய்க்கும் - 300 ரூபாய் விற்பனையான மல்லிப் பூ நான்கு மடங்கு விலை உயர்ந்து ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

தோவாளை மலர் சந்தை

அரளிப் பூ கிலோ 80 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும் சம்பங்கி பூ 80 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் ரோஜா பூ கிலோ 80 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. மேலும் தாமரை, கனகாம்பரம் உள்பட அனைத்து பூவின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. பூ விலை உயர்ந்துள்ளதால் தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:பெரம்பலூரில் கேந்தி பூக்கள் சாகுபடி தீவிரம்!

Intro:தீபாவளி பண்டிகையையொட்டிதோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்வு. நான்கு நாட்களுக்கு முன்பு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி 1000 ரூபாய்க்கும் மல்லி 300 ல் இருந்து 1200 ரூபாய்க்கும் விற்பனை.Body:tn_knk_01_deebavali_flowermarket_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

தீபாவளி பண்டிகையையொட்டிதோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்வு. நான்கு நாட்களுக்கு முன்பு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி 1000 ரூபாய்க்கும் மல்லி 300 ல் இருந்து 1200 ரூபாய்க்கும் விற்பனை.

தமிழகத்தில் உள்ள மலர் சந்தைகளில் மிகவும் புகழ் பெற்றது குமரி மாவட்டத்தில் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தையாகும். இங்கு ராயகோட்டை திண்டுக்கல் மதுரை ஓசூர் பெங்களூர் மற்றும் உள்ளூர் பகுதிகளான செண்பகராமன்புதூர் ஆரல்வாய்மொழி குமாரபுரம் சுற்று வட்டார பகுதிகளில் தினந்தோறும் பல டண் பூக்கள் இறக்குமதி ஆகும். அதைப்போல் கேரளா மாநிலம் மற்றும் சிங்கபூர் இலங்கை மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் தினந்தோறும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பொது மக்களுக்கு பூக்களின் தோவை அதிகரித்துள்ளதால் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட. பிச்சி பூ மூன்று மடங்கு விலை அதிகரித்து இன்று 1000 ரூபாய்க்கும் மல்லி பூ நான்கு மடங்கு விலை உயர்ந்து 300 ரூபாயில் இருந்து 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேப்போல் அரளி பூ கிலோ 80 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் சம்பங்கி பூ 80 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகவும் ரோஜா பூ கிலோ 80 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. மேலும் தாமரை கனகாம்பரம் உள்பட அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தே காணப்படுகிறது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.