ETV Bharat / state

கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்த கார்... நடந்தது என்ன?

author img

By

Published : Dec 9, 2019, 9:03 AM IST

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து கணவன் மனைவி, ஒன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kanniyakumari-accident
kanniyakumari-accident

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அஞ்சு கண்டறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் (30). இன்று விடுமுறை தினம் என்பதால் அவரும், மனைவி மஞ்சு (27), ஒன்றரை வயது குழந்தை அமர்நாத் ஆகிய மூன்று பேரும் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கால்வாய் அருகே உள்ள சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர்.

கால்வாயில் விழுந்த கார்

சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இதில், கால்வாய் உள்ள தண்ணீரில் மூழ்கி கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூவரும் உயிரிழந்தனர். குலசேகரம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

வைக்கோல் விலை உயர்வு: விற்பனையாளர்கள் மகிழ்ச்சி... கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சி!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து கணவன் மனைவி, ஒன்றரை வயது குழந்தை குழந்தை உட்பட மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு. குலசேகரம் போலீசார் விசாரணை.Body:tn_knk_06_accident_threedeth_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து கணவன் மனைவி, ஒன்றரை வயது குழந்தை குழந்தை உட்பட மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு. குலசேகரம் போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அஞ்சு கண்டறை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் வயது 30. இன்று விடுமுறை தினம் என்பதால் அவரும் இவரும் மனைவி மஞ்சு வயது 27 மற்றும் ஒன்றரை வயது குழந்தை அமர்நாத் அகிய மூன்று பேரும் கடையில் பொருட்கள் வாங்கி வீட்டுக்கு கால்வாய் அருகே உள்ள சாலையில் காரில் வந்து கொண்டு இருந்தனர். சாலைகளில் உள்ள குண்டும் குழியும் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்தில் கால்வாய் உள்ள தண்ணீரில் மூழ்கி கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூவரும் உயிரிழந்தனர். குலசேகரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் இப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.