ETV Bharat / state

வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: வியாபாரிகள் போராட்டம்

author img

By

Published : Sep 15, 2020, 12:31 PM IST

கன்னியாகுமரி: களியக்காவிளை காய்கறி சந்தையில் காய்கறி ஏற்றி வரும் வாகனங்களுக்கு அதிக தீர்வை கட்டணம் வசூலிப்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் வாகனங்களுக்கு வாடகை மற்றும் தீர்வை வரி வசூலிக்க பந்தாலு மூட்டை சேர்ந்த சதிஷ்குமார் என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால், அரசு அனுமதித்ததை விட அதிகமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ராஜசேகர் என்பவருக்கு விற்பனை செய்ய வாழைதாறுகளை ஏற்றி வந்த மினி டெம்போவிற்கு 150 ரூபாய் அரசு கட்டணம் விதித்திருந்த நிலையில், நானூறு ரூபாய் கேட்டதாக தெரிகிறது. பணத்தை பெற்று ரசீது கொடுக்காததால் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே, சிலர் அந்த வாகனத்தின் கதவை உடைத்து, வாகனத்தை களியக்காவிளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காய்கறி வாகனங்களில் வந்த பொருள்களை இறக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். களியக்காவிளை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிக வசூல் கட்டணம்
அதிக வசூல் கட்டணம்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: 2021இல் சசிகலா விடுதலை - சிறைத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.