ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

author img

By

Published : Jan 2, 2020, 9:49 PM IST

கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் ஊராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Kanyakumari local body election counting
Kanyakumari local body election counting

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4ஆவது வார்டில் போட்டியிட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு தலா 1,251 வாக்குகள் கிடைத்தன. இதனால் பதிவான வாக்குகளை மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.

ஆனால், அப்போது அதிமுக மேலிட பிரதிநிதியான கவிஞர் சதாசிவம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். இதற்கு திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் இருந்தால் நாங்களும் வருவோம் என்று கூறி அவர்களும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காவல் துறையினர் அவர்களை வெளியே செல்லும்படி வலியுறுத்தினார்கள். அதிமுக பிரதிநிதி வெளியே செல்லவில்லை என்றால் நாங்களும் செல்ல மாட்டோம் என்று திமுகவினர் கூறி வாக்கு எண்ணும் மையத்திற்குளேயே இருந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

இதனைத் தொடர்ந்து, அதிமுக மேலிட பிரதிநிதி கவிஞர் சதாசிவம் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் திமுகவினரும் மையத்திலிருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: வெற்றியை அறிவிக்காததால் வேட்பாளர் தர்ணா!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 4 வது வார்டு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சம அளவு போட்டு கிடைத்ததால் மீண்டும் ஓட்டுகள் என்ன வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர் இந்த நிலையில் அதிமுக மேலிடம் பிரதிநிதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றதால் திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது Body:tn_knk_02_election_dmk_admk_clash_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 4 வது வார்டு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சம அளவு போட்டு கிடைத்ததால் மீண்டும் ஓட்டுகள் என்ன வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர் இந்த நிலையில் அதிமுக மேலிடம் பிரதிநிதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றதால் திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  4 வது வார்டில் போட்டியிட்ட  பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு தலா 1251 ஓட்டுகள் கிடைத்தன இதனைத்தொடர்ந்து அந்த வார்டில் ஓட்டுகளை மீண்டும் என்ன வேண்டுமென்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர் ஆனால் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாத நிலையில் அதிமுக மேலிட பிரதிநிதியான கவிஞர் சதாசிவம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் இதற்கு திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர் வயதுக்குள் இருந்தால் நாங்களும் வருவோம் என்று கூறி அவர்களும் வாக்கு மையத்துக்குள் சென்றனர் இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது போலீசார் அவர்களை பார்க்க முயற்சி இருந்து வெளியே செல்லும்படி வலியுறுத்தினார்கள் ஆனால் திமுக பிரதிநிதி வெளியே செல்லாத நிலையில் நாங்களும் செல்ல மாட்டோம் என்று திமுகவினர் கூறி வாக்கு எண்ணும் மையத்திற்குள் இருந்தனர் இதனைத் தொடர்ந்து அதிமுக மேலிட பிரதிநிதி கவிஞர் சதாசிவம் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார் இதனைத் தொடர்ந்து திமுகவினரும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினர் இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

விசுவல் - வாக்கு எண்ணும் மையம் - அதிமுக மற்றும் திமுக வினர் வாக்கு மையத்தில்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.