ETV Bharat / state

வெள்ள நீரில் கும்மாளம் போட்ட பெண்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை

author img

By

Published : Nov 14, 2021, 2:21 PM IST

கன்னியாகுமரியில் நேற்று (நவ. 13) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில், அப்பகுதி பெண்கள் ஜாலியாக குளித்து விளையாடுகின்றனர்.

girls paly with rain water  rain water  kanniyakumari rain  rain  heavy rain  kanniyakumari flood  வெள்ள நீரில் ஆட்டம்  கன்னியாகுமரியில் கனமழை  மழை  கனமழை  கன்னையாகுமரியில் வெள்ள நீரில் ஆட்டம் போட்ட பெண்கள்  வெள்ள நீரில் விளையாடிய பெண்கள்
வெள்ள நீரில் கும்மாளம்

தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்று (நவ. 13) பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ள நீரில், அப்பகுதி பெண்கள் ஜாலியாக குளித்து விளையாடும் காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது ஆபத்தான செயலாகும்.

வெள்ள நீரில் கும்மாளம்

மேலும் நெட்டிசன்கள். “நாங்கள் சென்னை இல்லடா, கன்னியாகுமரி” போன்ற வாசகங்கள் குறிப்பிட்டு காணொலியைப் பரப்பிவருகின்றனர். இதனைப் பார்த்த ஸ்டாலின், இது போன்று வெள்ள நீரில் விளையாடுவது ஆபத்தான செயல் எனவும், இத்தகைய செயல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: குமரியில் கனமழை தொடரும் - ஒருசில இடங்களில் அதி கனமழை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.