ETV Bharat / state

மீன்பிடி தடைக்காலம்; "விசைப்படகுகளை நிறுத்த வழியில்லை" - குளச்சல் மீனவர்கள் வேதனை!

author img

By

Published : Jun 8, 2023, 11:06 AM IST

அரபிக்கடலில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள காரணத்தால், விசைப் படகுகளை கரை ஒதுக்க முடியாமல் சிரமப்படுகின்றோம் என குளச்சல் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

fishermen request extend the Colachel harbor
மீன்பிடி தடைக்காலம்

படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் தவிப்பதாக குளச்சல் மீனவர்கள் வேதனை

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளைக் கிழக்கு கடற்கரை பகுதிகள் மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகள் என 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் மீன்களில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 61 நாள் மீன்பிடி தடை காலம் அமலிலிருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 15 ஆம் தேதி உடன் இந்த மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.

அதே வேளையில் மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 1 ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதலமாக கொண்டு சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடித்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குளச்சல் துறைமுகத்தை மட்டும் நம்பி சுமார் 600 முதல் 700-க்கும் மேலான கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளும் உள்ளன. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு அரபிக்கடல் பகுதியில் சுமார் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் வேலையில், குளச்சல் துறைமுகத்தில் தங்கு தளமாக கொண்டு செயல்பட்டு வரும் 250 விசைப்படகுகளையும் ஒரே நேரத்தில் இந்த துறைமுகத்தில் கட்டுவதற்கு இடவசதி இல்லை. தற்போது இந்த துறைமுகத்தில் சுமார் 40 முதல் 50 விசைப் படகுகளை மட்டுமே நிறுத்தி வைக்க முடியும்.

ஆகையால், மீதம் உள்ள விசைப்படகுகளை தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலும், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள துறைமுகங்களிலும் வாடகை கட்டணங்கள் செலுத்தி நிறுத்தி வைக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படுகிறது. மேலும் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளில் பழுது பார்க்கும் பணிகளை செய்வது வழக்கம். ஆனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பழுது பார்க்கும் பணிமனையும் இல்லை.

ஆகவே குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 250 முதல் 300 படகு விசைப்படகுகள் நிறுத்தி வைப்பதற்கும், சுமார் 600 முதல் 700 க்கு மேற்பட்ட கட்டு மரங்கள் அந்தப் பகுதியில் நிறுத்தி வைப்பதற்கும் வசதியாக விரிவாக்கம் செய்து தர வேண்டும் என்று அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் மீனவர்கள் இது போன்ற கோரிக்கையை முன் வைக்கும் போது அதிகாரிகள் வந்து விரிவாக்கத்திற்கான ஆய்வு பணிகளைச் செய்வார்கள். ஆனால் அதன்பின்பு எந்த ஆக்கப்பூர்வமான பணிகளும் நடைபெறுவதில்லை. பல ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், உடனடியாக பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் சொல்லப்படும். ஆனால் வேறு எந்த பணியும் நடைபெறுவது இல்லை.

சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக விரிவாக்கம் செய்து கேட்ட போதும், இதுவரை அரசு தரப்பில் விரிவாக்க பணிகள் செய்ய முன்வரவில்லை. இதனால் விசைப் படகுகளைப் பழுது பார்க்கும் பணிகள் உள்ளூரில் செய்ய முடியாமல், கேரள மாநிலத்திற்குக் கொண்டு சென்று பராமரிப்பு பணிகளைச் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் அதிகப் பணச் செலவு மீனவர்களுக்கு ஏற்படுகிறது.

அதேபோன்று குளச்சலில் 50 படகுகள் மட்டுமே நிறுத்த இடம் உள்ளது. அதனால் இந்த மீன்பிடி துறைமுகத்தில் காற்றின் காரணமாக விசைப்படகு ஒன்றோடு ஒன்று மோதி பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து தர வேண்டும். மேலும் மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.15,000 ரூபாய் நிவாரண நிதியாக அரசு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

முன்னர் தேர்தல் பிரச்சார நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்க வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. அந்த தேர்தல் வாக்குறுதியினை இந்த நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Operation Missing Children: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.