ETV Bharat / state

'ஒழிந்தான் மகிஷாசூரன்; இனி ஓய்வெடுப்பார் மகாகாளி!'- தோவாளையில் நடந்த முத்தாரம்மனின் வதம்!

author img

By

Published : Oct 8, 2019, 11:56 PM IST

கன்னியாகுமரி: தோவாளைப் பகுதியில் நடைபெற்ற முத்தாரம்மன், மகிஷாசூரனை வதம் செய்யும் காட்சியை ஆயிரகணக்கான பக்தர்கள் கண்டு களித்தார்கள்.

முத்தாரம்மன், மகிஷாசூரனை வதம் செய்யும் காட்சி...

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைப் பகுதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மலர்களால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை பகுதியில் மகிஷாசூர அரக்கனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம், கேரள செண்டை மேளங்கள், அம்மன் அரக்கனை வதம் செய்யும் காட்சிகள் அடங்கிய வாகன ஊர்திகள் ஊர்வலமாக வந்தன. பின்னர் காளி உள்பட மூன்று அம்மன்கள் சேர்ந்து மகிஷாசூரனை வதம் செய்யும் தத்துரூப நாடகம் தோவாளை மலர்ச் சந்தை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கலைநிகழ்ச்சியோடு நடைபெற்ற முத்தாரம்மன், மகிஷாசூரனை வதம் செய்யும் காட்சி...

இதனை ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர், நாகர்கோவில், கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தார்கள். இந்நிகழ்ச்சியையொட்டி நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதையும் படியுங்க:

மைசூரு தசரா கோலாகலமாகத் தொடக்கம்!

புழுதி பறக்க புலியாட்டம் - விருதுநகரில் வித்தியாசமான விஜயதசமி!

Intro:நவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் தோவாளை கிருஷ்ணன்புதூர் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா மகிஷாசுர சம்காரம் விழா நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டார்கள்.
Body:tn_knk_03_dhsara_magisasurasamkaram_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

நவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் தோவாளை கிருஷ்ணன்புதூர் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா மகிஷாசுர சம்காரம் விழா நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10ம் நாள் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை பகுதியில் வைத்து மகிஷாசூர அரக்கனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கரகாட்டம் ஒயிலாட்டம் கேரளா செண்டை மேளங்கள் அம்மன் அரக்கனை வதம் செய்யும் காட்சிகள் அடங்கிய வாகன ஊர்திகள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் காளி உள்ப்பட மூன்று அம்மன்கள் சேர்ந்து மகிஷாசூரனை வதம் செய்யும் தத்துருப நாடகம் தோவாளை மலர் சந்தை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதனை ஆரல்வாய்மொழி தோவாளை செண்பகராமன் புதூர் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெண்கள் உட்பட ஆயிரகணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தார்கள். மகிஷாசூர வதம் செய்யும் நிகழ்ச்சியையொட்டி நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.