ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த கடல் அலை; சுவர் இடிந்து முதியவர் படுகாயம்

author img

By

Published : Jul 16, 2019, 9:55 AM IST

கன்னியாகுமரி: கடல் சீற்றத்தால் அலைகள் தடுப்பு சுவர் மீது மோதியதில், சுவர் விழுந்து படுகாயமடைந்த முதியவர் ஒருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதியவர் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே அழிக்கால் மீனவ கிராமத்தில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

கடல் அலைகள் வீட்டு தடுப்பு சுவர் மீது பாய்ந்ததால் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மீனவர் டைமண்ட் (56) என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது பத்து கோடி ரூபாய் செலவில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்படுகிறது என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊருக்குள் புகுந்த கடல் அலையால் தடுப்பு சுவர் விழுந்து முதியவர் படுகாயம்
Intro:கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடலோர பகுதியில் திடீர் கடல் சீற்றம் காரணமாக அழிகால் கிராமத்தில் கடல் நீர் தடுப்பு சுவரை தாண்டி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் சுவர் இடிந்து விழுந்து மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தடுப்பு சுவர் கட்டாததால் இது போன்று கடல் நீர் ஊருக்குள் வருவதாக மீனவர் கள் வேதனை தெரிவித்தனர்.Body:tn_knk_03_sea_erosion_script_TN10005
எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடலோர பகுதியில் திடீர் கடல் சீற்றம் காரணமாக அழிகால் கிராமத்தில் கடல் நீர் தடுப்பு சுவரை தாண்டி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் சுவர் இடிந்து விழுந்து மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தடுப்பு சுவர் கட்டாததால் இது போன்று கடல் நீர் ஊருக்குள் வருவதாக மீனவர் கள் வேதனை தெரிவித்தனர்.


நாகர்கோவில் அருகே அழிக்கால் மீனவ கிராமத்தில் இன்று மாலை திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு தடுப்பு சுவர்களை தாண்டி ஊருக்குள் தண்ணீர் புகுந்தததால் மீனவர்கள் அலறி அடித்து ஓடினர். கடல் அலைகள் ஆர்ப்பரித்து பாய்ந்து படகுடன் காம்பவுண்டு சுவர் மீது விழுந்ததால் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மீனவர் டைமண்ட் (56) படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது 10 கோடி ரூபாய் செலவில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து இது போன்ற துயரம் ஏற்பட்டு வருகிறது என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.உடனடியாக அந்த திட்டத்தை துவக்கி செயல் படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.