ETV Bharat / state

புயல் குறித்து தகவல் தெரியாமல் ஆழ்கடலில் தவிக்கும் 1,500 மீனவர்கள்!

author img

By

Published : Dec 1, 2020, 11:25 AM IST

கன்னியாகுமரி: புயல் குறித்து தகவல் கிடைக்காமல் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் சுமார் ஆயிரத்து 500 மீனவர்களுக்கு கப்பல் படை, விமானங்கள் மூலம் எச்சரிக்கை கொடுத்து கரை திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் அமைப்பின் தலைவர் அருட்தந்தை கோரிக்கைவைத்துள்ளார்.

புயல் குறித்து தகவல் தெரியாமல் ஆழ்கடலில் தவிக்கும் 1,500 மீனவர்கள்!
புயல் குறித்து தகவல் தெரியாமல் ஆழ்கடலில் தவிக்கும் 1,500 மீனவர்கள்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அது இன்று புயலாக வலுவடைந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு "புரெவி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்காசிய மீனவர் அமைப்பின் தலைவர் அருட்தந்தை சர்ச்சில் கூறியிருப்பதாவது:

வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய புயல் வலுப்பெற்று இலங்கை வழியாக கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிமீ வரை சூறைக் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டுமென்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் தெரிந்து கடந்த இரண்டு நாள்களில் 350 விசைப்படகுகளில் 3500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர்.

சாட்டிலைட் மூலம் அரசின் எச்சரிக்கை தகவல் கிடைக்காமல் லட்சத்தீவு, கார்நாடகா, குஜராத் உள்ளிட்ட ஆழ்கடல் பகுதிகளில் 150 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் சுமார் 1500 குமரி மீனவர்கள் இன்னும் கரை திரும்பாமல் உள்ளனர்.

எனவே இந்த மீனவர்களுக்கு விமானங்கள், கப்பல் படை கப்பல்கள் மூலம் உடனே எச்சரிக்கை கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தெற்காசிய மீனவர் அமைப்பின் தலைவர் அருட்தந்தை

இதையும் படிங்க: வலுவடைந்தது 'புரெவி' புயல் சின்னம் - கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.