ETV Bharat / state

சாலைகளை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டம்!

author img

By

Published : Sep 28, 2019, 8:12 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, நாற்று நடும் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Cpi protested by planting crops in roads

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில், சாலைகள் குண்டும் குழியுமாக, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருவதோடு, விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டுவருகின்றன.

இதனால் இந்த சாலைகளை சீரமைக்கக் கோரி, பல்வேறு போராட்டங்களை பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தியுள்ளபோதிலும் இதுவரையிலும் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

cpi protested in Kanyakumari

எனவே, இதனைக் கண்டித்தும் உடனடியாக சாலைகளை சீரமைக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாகர்கோவில், கீழத்தெரு சந்திப்பின் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை இன்று நடத்தினர். தங்கள் கட்சிக் கொடியுடன் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டவாறு, சாலைகளை சீரமைக்கக் கோரி கோஷங்களையும் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

tn_knk_04_cpi_road_plantation_protest_visual_7203868Body:நாகர்கோவில் நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இந்த சாலைகளை சீரமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போதிலும் இதுவரையிலும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இதனை கண்டித்தும், உடனடியாக சாலைகளை சீரமைக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாகர்கோவில் கீழ தெரு சந்திப்பில் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை இன்று நடத்தினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொடியுடன் வந்தவர்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், சாலைகளை சீரமைக்க கோரி கோஷங்களை எழுப்பினர்கள். இதனை தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.