ETV Bharat / state

குமரியில் இரண்டு நாட்களாக தொடரும் கனமழை

author img

By

Published : Sep 2, 2019, 10:32 PM IST

கன்னியாகுமரி: இரண்டு நாட்களாக குமரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

continuous-rains

கன்னியாகுமரியில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, இன்று காலை வரையிலும் நீடித்ததால் நகரின் முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக குமரியில் இடியுடன் கூடிய கனமழை

அதிகபட்சமாக, மயிலாடியில் 80 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற அணை பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளதால், அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Intro:கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடரும் கனமழை. மாவட்டத்திலேயே அதிக பட்சமாக மயிலாடியில் 80.2 மி.மீ. மழை பெய்து உள்ளது. Body:குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை மேலும் வலுத்துள்ளது.

நேற்று இரவு முதலே மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தபடி இருந்தது. இதன் காரணமாக நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான மார்த்தாண்டம், குலசேகரம், திற்பரப்பு, கருங்கல், தக்கலை, இரணியல், குளச்சல் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மேலும், விடிய, விடிய பெய்த மழை இன்று காலையும் நீடித்தது. இன்றும் கனமழையாக பெய்ததால் நகரின் முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்துடனேயே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

மாவட்டத்திலேயே அதிக பட்சமாக மயிலாடியில் 80.2 மி.மீ. மழை பெய்து உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-63.7, கொட்டாரம் -72, இரணியல்- 21, ஆனைக்கிடங்கு-44.2, குளச்சல்-24.4, அடையா மடை-14, கோழிப்போர் விளை-45, முள்ளங்கினா விளை-30, பூதப்பாண்டி- 25.4, சுருளோடு-10, மாம்பழத்துறையாறு-61, கன்னிமார்-16.4, ஆரல்வாய் மொழி-19, பாலமோர்-37.2, திற்பரப்பு-23.4.

அதேப்போல குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற அணை பகுதிகளிலும் மழை பெய்து உள்ளதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.