ETV Bharat / state

கரோனா தொற்றால் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு: காவல் துறையினர் மரியாதை!

author img

By

Published : Jul 15, 2020, 10:47 PM IST

Updated : Jul 16, 2020, 5:57 PM IST

காஞ்சிபுரம்: கரோனா தொற்றால் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதைக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.

கரோனா தொற்றால் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு: காவல் துறையினர் மரியாதை!
Sub inspector dead by corona

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி, பணியின்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், கடந்த 20ஆம் தேதி முதல் ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.

இந்நிலையில், தொற்றின் தீவிரத்தால் சிகிச்சைப் பலனின்றி சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி உயிரிழந்தார். உயிரிழந்த பழனியின் உடல் காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளக்கரை இடுகாட்டில் தகனம் செய்ய கொண்டுவரப்பட்டது.

சிறப்பு உதவியாளர் பழனியின் உடலுக்கு காவல் துறையினரின் அணிவகுப்புடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி, எஸ்.பி. சண்முகப்பிரியா, துணை ஆட்சியர் சரவணன் ஆகியோர் நேரில் சென்று அரசு மரியாதை செலுத்தினர். பின்னர் பழனியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

காவல் துறையினரின் அரசு மரியாதையை தொடர்ந்து பழனியில் உடல் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Last Updated : Jul 16, 2020, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.