ETV Bharat / state

பெரியார் சிலை உடைப்பு: காஞ்சியில் பரபரப்பு!

author img

By

Published : Jan 24, 2020, 12:05 PM IST

காஞ்சிபுரம்: சாலவாக்கம் அடுத்த களியப்பேட்டை பகுதியில் சமூகவிரோதிகள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

priyar
priyar

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்துகள், தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டுவருகிறது. நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இது ஒருபுறமிருக்க ரஜினிகாந்தின் கருத்துக்கு திமுக, அதிமுக, திக உள்ளிட்ட கட்சிகள் எதிராகக் கருத்து கூறிவருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த களியப்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை சமூகவிரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை: சமூகவிரோதிகள் அட்டூழியம்

பெரியார் சிலையை உள்ளூர் மக்கள் யாரும் சேதப்படுத்த வாய்ப்பில்லை என அப்பகுதி கிராமவாசிகள் தெரிவித்தனர். எனவே சிலையை சேதப்படுத்தியது வெளிப்பகுதியைச் சேர்ந்த நபர்களாக இருக்கக்கூடும் எனவும், கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். சிலையை சேதப்படுத்திய நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'பெரியார் ஒரு மின்சாரம் தொட்டால் ஷாக்கடிக்கும்' - கி.வீரமணி

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த களியப்பேட்டை பகுதியில் பெரியார் சிலை உடைப்பு மர்ம நபர்கள் கைவரிசை சாலவாக்கம் போலீசார் விசாரணை


Body:சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு நிகழ்ச்சியில் பெரியார் பற்றி ரஜினி கூறிய கருத்து தமிழக அரசியலில் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டு வந்தது நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சிகள் உள்ளிட்ட ஹிந்து மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர் இன்னிலையில், ரஜினிகாந்தின் கருத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் எதிராக கருத்து கூறி வருகின்றனர் இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த களியப்பேட்டை பகுதியில் பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மிக பெரிய ஒன்றியம் ஆன உத்தரமேரூர் ஒன்றியம் திமுக கைவசம் உள்ளது எனவே உள்ளூர் மக்கள் யாரும் சேதப்படுத்த வாய்ப்பில்லை என அப்பகுதி கிராமவாசிகள் தெரிவித்திருந்தனர் எனவே சிலையை சேதப்படுத்தியது வெளி பகுதியைச் சார்ந்த நபர்களாக இருக்கக்கூடும் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர் நிலையில் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். Conclusion:20 ஆண்டுகளுக்கு முன்பு கலி. பூங்குன்றன் பெரியார் சிலையை திறந்து வைத்துள்ளார் இன்று கிராம மக்களால் கூறப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.