ETV Bharat / state

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Dec 13, 2019, 8:01 PM IST

காஞ்சிபுரம், கோவை, நாமக்கல், திருவாரூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு

மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம், கோவை, நாமக்கல், திருவாரூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தலைமையில் குடியுரிமை சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட சுமார் 1500 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் திமுக பாராளமன்ற உறுப்பினர் முகமது சகி தலைமையில் அண்ணா கலையரங்கம் எதிரில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல் நாமக்கல், திருவாரூர், கோவை போன்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் ஆங்காங்கே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க:

குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின் கைது

Intro:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மணிக்கூண்டு அருகே கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியினர் சாலை மறியல், 50க்கும் மேற்பட்டோர் கைது


Body:குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞரணியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டிக்கும் விதமாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிக்க வேண்டும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மணிக்கூண்டு அருகே 50க்கும் மேற்பட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். இதனால் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.




Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.