ETV Bharat / state

மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது - தமிழிசை

author img

By

Published : Oct 10, 2022, 7:51 AM IST

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக அளித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கின்றது எனத் தெரிவித்தார்.

Etv Bharatமூத்த குடிமக்களுக்கான ஆதரவு அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது - தமிழிசை
Etv Bharatமூத்த குடிமக்களுக்கான ஆதரவு அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது - தமிழிசை

காஞ்சிபுரம்: மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக அளித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே நடைபெற்ற தமிழ்நாடு மண்டல பிரம்மகுமாரிகள் இயக்க பொன்விழா‌ ஆண்டு விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

தமிழ்நாடு மண்டல பிரம்மகுமாரிகள் இயக்க பொன்விழா‌ ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. முதல்நாள் நிகழ்வு சென்னையில் நடைபெற்றபின் இரண்டாம் நாள் நேற்று(அக்-9)காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பிரம்மகுமாரிகள் தியான பயிற்சி நிலைய மையத்தின் அருகே காலை முதல் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் இந்த பொன்விழா ஆண்டு விழாவின் நிறைவு விழாவினை தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கினை ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் பேசிய பிரம்ம குமாரிகள், இந்தியா முழுவதும் 250-க்கும் மேற்பட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பின் கிளைகளைக் கொண்டு ஆன்மிகத்தை அளித்து மன அமைதி, மகிழ்ச்சி அனைத்தையும் மக்களுக்கு வழங்கி வருகிறது எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து விழா சிறப்புரையாற்றி பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘பிரம்ம குமாரிகள் இயக்கம் அன்பை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் வரவேற்பதாகவும், அன்பு, மகிழ்ச்சி என்ற சாவி நம் கையில் தான் உள்ளது. அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறோமோ அதன் மூலமே நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பூஜைப்பொருட்களான தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை இவை அனைத்தும் நாம் திரும்ப பெற்றுக்கொள்ளும் நிலையில் கற்பூரம் மட்டுமே தன்னை முழு அர்ப்பணிப்புடன் இறைவனுக்கு அளிப்பதைப்போல், பிரம்ம குமாரிகள் இயக்கம் கற்பூரம் போல் தன்னை முழு அர்ப்பணிப்போடு பொதுமக்களுக்கு தந்து, அன்பை வழங்குகிறது' என பெருமிதத்தோடு தெரிவித்தார்.

மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது - தமிழிசை

மேலும், 'கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மூத்த குடிமக்களின் சொத்துகளை பெற்றுக்கொண்டு அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவதால் அவர்கள் நினைத்தால் மீண்டும் அளித்த சொத்துக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அளித்த தீர்ப்பைக் கண்டு பெரு மகிழ்ச்சியுடைந்தேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் திமுக தனித்தே வெல்லும்’ - ஐ.பெரியசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.