ETV Bharat / state

இருசக்கர வாகனம் விபத்து: இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 5, 2020, 2:32 PM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இருசக்கர வாகன விபத்து
இருசக்கர வாகன விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள சேரந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், கார்த்திக் ஆகிய இருவரும், இன்று (அக்.05) அம்மன் கொல்லைமேடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியே வந்த வாகனம் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் காவல் துறையினர், உயிரிழந்த இளைஞர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருக்கோயிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த கார்த்திக்கின் அக்கா சுகன்யாவின் பிள்ளைகளை அழைத்து வருவதற்காக, இருவரும் இருசக்கர வாகனத்தில் வேங்கூர் கிராமத்திற்குச் சென்றபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தீ விபத்திலிருந்து லாரியை காப்பாற்றிய ஓட்டுனர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.