ETV Bharat / state

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்: மீட்கும் பணியை துரிதப்படுத்த உத்தரவு!

author img

By

Published : Dec 8, 2020, 5:29 PM IST

கள்ளக்குறிச்சி: கருணாபுரம் தடுப்பணையில் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள கருணாபுரம் தடுப்பணையில் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வரதராஜ், ராஜ்குமார், அஸ்விந்த் ஆகிய மூன்று சிறுவர்களை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர்.

இதையடுத்து, வரதராஜ், ராஜ்குமார் ஆகியோரை மீட்கப்பட்ட நிலையில் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, வரதராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அஸ்விந்தை மீட்கும் பணியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையடுத்து, கருணாபுரம் தடுப்பணை பகுதியில் நடைபெற்றுவரும் மீட்கும் பணிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேரில் ஆய்வு மேற்கொண்டு, மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சிறுவனின் உறவினர்களை சந்தித்த ஆட்சியர் கிரண்குராலா, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் ஸ்ரீ காந்த், கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமநாதன், வட்டாட்சியர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: வைகை ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.