ETV Bharat / state

ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்த குழந்தையின் சடலம்.. சொத்து பிரச்சினையால் குழந்தை கொலையா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 2:24 PM IST

child corpse in speaker box: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன குழந்தை அதே வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன குழந்தை அதே வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன குழந்தை அதே வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன குழந்தை அதே வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு வாசலில் விளையாடிய குழந்தை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த செப் 17 ஆம் தேதி வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மாலை காணமல் போய்விட்டதாக திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்தார்.

ஸ்பீக்கர் பாக்ஸில் துர்நாற்றம்: இந்த புகாரின் அடிப்படையில் திருப்பாலபந்தல் போலீசார் குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த நான்கு நாட்களாக திருப்பாலப்பந்தல் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று (செப். 21) காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் ஒன்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்துள்ளனர்.

சடலமாக கிடைத்த குழந்தை: அப்போது அதில் காணாமல் போன இரண்டு வயது குழந்தை திருமூர்த்தி இறந்து சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக திருப்பாலப்பந்தல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவரின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?: அதனைத் தொடர்ந்து குழந்தையின் இறப்புக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போனதாக கூறப்பட்ட குழந்தை, வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குருமூர்த்தியின் தம்பியான ராஜேஷ், சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, குழந்தையை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்; வெளியான சிசிடிவி.. மாணவர்களுக்கு டிசி..

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன குழந்தை அதே வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு வாசலில் விளையாடிய குழந்தை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த செப் 17 ஆம் தேதி வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மாலை காணமல் போய்விட்டதாக திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்தார்.

ஸ்பீக்கர் பாக்ஸில் துர்நாற்றம்: இந்த புகாரின் அடிப்படையில் திருப்பாலபந்தல் போலீசார் குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த நான்கு நாட்களாக திருப்பாலப்பந்தல் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று (செப். 21) காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் ஒன்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்துள்ளனர்.

சடலமாக கிடைத்த குழந்தை: அப்போது அதில் காணாமல் போன இரண்டு வயது குழந்தை திருமூர்த்தி இறந்து சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக திருப்பாலப்பந்தல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவரின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?: அதனைத் தொடர்ந்து குழந்தையின் இறப்புக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போனதாக கூறப்பட்ட குழந்தை, வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குருமூர்த்தியின் தம்பியான ராஜேஷ், சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, குழந்தையை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்; வெளியான சிசிடிவி.. மாணவர்களுக்கு டிசி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.