ETV Bharat / state

ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்: 2 பேரிடம் தீவிர விசாரணை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 1:21 PM IST

Updated : Jan 21, 2024, 1:52 PM IST

Gold Smuggled: ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 1.485 கிலோ எடையுள்ள கடத்தி வந்த இருவரிடம் திருச்சி விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: ஷார்ஜாவில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணால் உடலில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 1.485 கிலோ எடையுள்ள தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (ஜன.21) பறிமுதல் செய்தனர். இந்நிலையில் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்தார்கள் என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல உள்நாடுகளுக்கும் தொடர்ந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையத்தில் சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், துபாய் ஷாா்ஜாவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று வந்த, ஏா் இந்தியா விமானப் பயணிகளையும், அவரது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் வழக்கம் போல் சோதனையிட்டனா்.

இதையும் படிங்க: வாலாஜாபேட்டையில் காணாமல் போன 4ஆம் வகுப்பு மாணவன்; போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!

இதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பயணியிடம் நடத்திய சோதனையில், அவா்கள் 1.485 கிலோ எடையுள்ள சுமாா் ரூ.93.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தங்களது உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், இருவரையும் திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வந்தது ஏன்? அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையாமதா? எத்தனை முறை விமானங்களில் வெளிநாடு பயணித்துள்ளனர்? இவர்கள் மீது வேறேதும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்களை கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் இதுபோன்ற சம்பவகள் நடந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளவட்டக்கல் தூக்கிய இளைஞர் உயிரிழப்பு! காணும் பொங்கல் விழாவில் சோகம்!

திருச்சி: ஷார்ஜாவில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணால் உடலில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 1.485 கிலோ எடையுள்ள தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (ஜன.21) பறிமுதல் செய்தனர். இந்நிலையில் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்தார்கள் என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல உள்நாடுகளுக்கும் தொடர்ந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையத்தில் சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், துபாய் ஷாா்ஜாவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று வந்த, ஏா் இந்தியா விமானப் பயணிகளையும், அவரது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் வழக்கம் போல் சோதனையிட்டனா்.

இதையும் படிங்க: வாலாஜாபேட்டையில் காணாமல் போன 4ஆம் வகுப்பு மாணவன்; போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!

இதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பயணியிடம் நடத்திய சோதனையில், அவா்கள் 1.485 கிலோ எடையுள்ள சுமாா் ரூ.93.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தங்களது உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், இருவரையும் திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வந்தது ஏன்? அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையாமதா? எத்தனை முறை விமானங்களில் வெளிநாடு பயணித்துள்ளனர்? இவர்கள் மீது வேறேதும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்களை கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் இதுபோன்ற சம்பவகள் நடந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளவட்டக்கல் தூக்கிய இளைஞர் உயிரிழப்பு! காணும் பொங்கல் விழாவில் சோகம்!

Last Updated : Jan 21, 2024, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.