ETV Bharat / state

வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்த இளைஞர் கைது

author img

By

Published : Jul 27, 2019, 8:00 AM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

youth


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வ.புதுப்பட்டி இந்திரா காலணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவஇடத்துக்கு வந்த காவல்துறையினர், வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, தங்கேஸ்வரன் என்ற இளைஞர் அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு தயாரித்தும், அது தயாரிப்பின் போது எதிர்பாராத விதமாக வெடித்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்த காவல்துறையினர், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:விருதுநகர்
26-07-19

நாட்டு வெடிகுண்டு தயாரித்து வாலிபரை கைது
Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வாலிபரை கைது செய்து காவல்துறை விசாரணை...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெடி சத்தம் கேட்டுள்ளது.பின்னர் அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் அந்த வீட்டில் நடத்திய சோதனையில் தங்கேஸ்வரன் என்ற வாலிபர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது அது எதிர்பாராத விதமாக வெடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நாட்டு வெடிகுண்டு தயாரித்த தங்கேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார். பின்னர் காவல் துறையினர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட டப்பா மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்தும் தங்கேஸ்வரனை கைது செய்தும் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.