ETV Bharat / state

தாளவாடியில் தென்னை மரங்களை நாசப்படுத்தும் காட்டு யானைகள்.. விவசாயிகள் அச்சம்..

author img

By

Published : Feb 4, 2023, 3:35 PM IST

சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள தென்னை மரக்கன்றுகளை தும்பிக்கையால் பிடிங்கி துவம்சம் செய்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

தென்னை மரங்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்
தென்னை மரங்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்

தாளவாடியில் தென்னை மரங்களை நாசப்படுத்தும் காட்டு யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராம மக்கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில மாதங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் மல்லன்குழி பகுதியில் உள்ள விவசாயி முத்துசாமி என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்குள்ள தென்னந்தோப்பில் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தும்பிக்கையால் பிடுங்கி சேதப்படுத்தின.

காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்து தென்னை மரங்களை சேதப்படுத்துவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர். தொடர்ச்சியாக இப்பகுதியில் தினமும் இரவில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அலட்சியம் - நகராட்சி நிர்வாகம் மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.