மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவச நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆன்லைன் நீட் தேர்வு பயிற்சி இன்று தொடங்கியது. இதற்கான அறிமுக விழா, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுருகன் தலைமையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
![மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுருகன் தலைமையில் நீட் பயிற்சி தொடக்கம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-01-neet-coaching-script-vis-7205221_30082019120205_3008f_1567146725_553.jpg)
ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு எடூஸ் இந்தியா ஆன்லைன் பயிற்சி மையம் மூலமாக நீட் பயிற்சி அளிக்கப்படும். ஈரோட்டில், ஆங்கில வழிக் கல்வி பயிலும் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 250 மாணவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். இவர்களுக்கு எடூஸ் இந்தியா ஆன்லைன் மையத்தின் பயிற்சியாளர் ஆஷிஸ் சிங், தேவேந்திர சர்மா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
![நீட் பயிற்சியின் போது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-01-neet-coaching-script-vis-7205221_30082019120205_3008f_1567146725_342.jpg)