ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிட வாய்ப்பு

author img

By

Published : Sep 24, 2020, 10:29 AM IST

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்குவதால் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விட வாய்ப்புள்ளது.

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து பவானி ஆறும் மாயாறும் முக்கிய நீர்வரத்து உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானிசாகர் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் 101.88 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது பில்லூர் அணையில் இருந்து 3 ஆயிரத்து 100 கனஅடி நீர் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை 102 அடியை எட்டுவதற்கு இன்னும் 12 பாயிண்ட்டுகள் தேவையான நிலையில் இன்று (செப்டம்பர் 24) மாலை 102 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. இதையடுத்து பவானிசாகர் அணை 20ஆவது முறையாக 102 அடியை எட்டுகிறது. அணையிலிருந்து 3 ஆயிரத்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 30.22 டிஎம்சி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.